கொலம்பியாவில் சுரங்கப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக பேரிடர் ஆபத்து மேலாண்மைக்கான தேசிய பிரிவு வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
கொலம்பியாவின் ஆன்டியோகியா பகுதிக்கு உட்பட்ட அப்ரியாக்கி நகராட்சி பகுதியில் கனமழையை தொடர்ந்து நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இங்கு அதிகாரப்பூர்வமற்ற முறையில் செயல்பட்டு வந்த தங்க சுரங்கத்தில் பணியாற்றிய தொழிலாளர்கள், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தனர். இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளதாகவும், மேலும் பலர் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டின் பேரிடர் ஆபத்து மேலாண்மைக்கான தேசிய பிரிவு தெரிவித்துள்ளது.
கொலம்பியாவில், புதன்கிழமை வெள்ளம் திடீரென ஏற்பட்டது. மேலும் எல் போர்வெனிர் தங்கச்சுரங்கத்திற்கு சொந்தமான ஒரு முகாமில் இருந்த சுரங்கத் தொழிலாளர்கள் உயரமான நிலத்திற்கு வெளியேற நேரம் இல்லை என்று செய்தி அறிக்கைகள் தெரிவித்தன.
இதையடுத்து தீயணைப்புத்துறையினர், குடிமைத் தற்காப்பு, ராணுவம், தேசிய காவல்துறை மற்றும் சுரங்க மீட்புப் பிரிவு உறுப்பினர்கள் உயிர் பிழைத்தவர்களை மீட்கவும், இறந்தவர்களின் உடல்களை மீட்கவும் பணிபுரிந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.